Posts

புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 3 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

Image
புதிய ஆபத்து ! முழு ஊரடங்கு 3 மாவட்டம் புதிய கட்டுப்பாடு விடுமுறை | lockdown latest news | school

கோடை காலத்தில் உண்டாகும் இதய பாதிப்புகளை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை..!

Image
மிகுந்த வெப்பம் கொண்ட கோடை காலத்தில் நமது உடல் வெப்பமும் அதிகரிக்கிறது. இத்தகைய சூழலில், ஒட்டுமொத்த உடலையும் குளுமையாக வைத்திருக்க நமது இதயம் சற்று கடினமாக செயல்பட வேண்டியிருக்கிறது. ஏற்கனவே இதயம் சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள், கோடை காலத்தில் போதிய முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ஸ்டிரோக் அல்லது ஹார்ட் அட்டாக் ஏற்படக் கூடும். கோடை காலத்தில் இதயம் எப்படி பாதிக்கிறது : வெப்பம் அதிகரிக்கும் போது உடல் இயக்கமும் மாறுபடுகிறது. உடலின் அனைத்து பாகங்களையும் குளுமையாக வைத்துக் கொள்ளும் பொருட்டு, ரத்தத்தை இதயம் அதிவேகமாக அனுப்பி வைக்க வேண்டியுள்ளது. இதனால், அதன் செயல்பாடு கடினமானதாக இருக்கிறது. உடலை முறையாக குளுமைப்படுத்தவில்லை என்றால் உங்களுக்கு ஹீட் ஸ்டிரோக்... விரிவாக படிக்க >>

``ஜூலியஸ் அசாஞ்சேவை நாடு கடத்தலாம்..!" - இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி

Image
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜீலியஸ் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. மேலும், அசாஞ்சேவை நாடு கடத்துவது தொடர்பான இறுதி முடிவை இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் ப்ரிதி படேல் எடுப்பார் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் போர் தொடர்பான ரகசிய கோப்புகளை வெளியிட்டது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்க ஏதுவாக இங்கிலாந்து நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. கடந்த மாதம் அசாஞ்சே நாடு கடத்தப்படலாம் என்ற கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இங்கிலாந்து உச்ச... விரிவாக படிக்க >>

மே 1 முதல் அமலுக்கு வருகிறது தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை

Image
சென்னை : ஒற்றைச்சாளர முறையில் அதுவும் தானியங்கி முறையில் கட்டட அனுமதியை பெறும் முறை, வரும் 1ம் தேதி முதல் அமலாகவுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்தகட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் ஒற்றைச்சாளர திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. Tags: ஒற்றைச்சாளர முறை தானியங்கி கட்டடம்... விரிவாக படிக்க >>

குஜராத் : ஜாம்நகரில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய மருந்துகளுக்கான உலக...

Image
குஜராத் : ஜாம்நகரில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல்.

தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம்

Image
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. தொழில் பூங்காக்கள், சிப்காட் தொழிற்சாலைகள், சென்னைக்கு அருகே விமான நிலையம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. முதல்வரின் அமீரக பயணம், போடப்பட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவும் வாய்ப்பு உள்ளது. Tags: சட்டப்பேரவை தொழில்துறை தமிழ் வளர்ச்சி விரிவாக படிக்க >>

மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்த வேண்டாம்... தமிழக அரசு மீது நீதிமன்றம் காட்டம்!

Image
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது தொடர்பாக நேத்ரோதயா என்ற அமைப்பு 2018 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உதவித்தொகையை அதிகரித்து வழங்குவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உதவித்தொகையை அதிகரித்து வழங்கும் விஷயத்தில் சமூக நலத்துறை செயலாளர் அக்கறையுடன் செயல்படவில்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டனர். மேலும், தற்போதைய விலைவாசியை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ஆயிரம் ரூபாய், 1500 ரூபாய் உதவித்தொகை வழங்குவதற்கு பதில், அவற்றை நிறுத்திவிடலாம்... விரிவாக படிக்க >>