9 இடங்களில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..! 463316881


9 இடங்களில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!


சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.6.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 2707 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 23,826 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.500 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், 938 பயனாளிகளுக்கு குடியிருப்புகள் மற்றும் மனைகளுக்கான கிரையப் பத்திரங்களையும் வழங்கினார்.

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புர ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1970-ஆம் ஆண்டு  தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புர ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை,

பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள ஆலையம்மன் கோயில் பகுதி - மி திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.41.20 கோடி மதிப்பீட்டில்  தூண் தளம் மற்றும் 9 தளங்களுடன் 324 புதிய குடியிருப்புகள்;  ஆர்-3 காவல் நிலையம் திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.10.44 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன் 80 புதிய குடியிருப்புகள்; வியாசர்பாடி டி.டி பிளாக் திட்டப்பகுதியில்   சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.60.60 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 13 தளங்களுடன் 468 புதிய குடியிருப்புகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம்,

கல்மந்தை திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 192 புதிய குடியிருப்புகள்; அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் திட்டப்பகுதியில் ரூ.48.98 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 576 புதிய குடியிருப்புகள்; தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி பகுதி-2 திட்டப்பகுதியில் ரூ.16.33 கோடி மதிப்பீட்டில் 175 தரைதள இரட்டை குடியிருப்புகள்; திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டி பகுதி - மி திட்டப்பகுதியில் ரூ.41.63 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 480 புதிய குடியிருப்புகள்; நாமக்கல் மாவட்டம், அணைப்பளையம் திட்டப்பகுதியில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் ரூ.18.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 208 புதிய குடியிருப்புகள்; நீலகிரி மாவட்டம்,

கடசனக்கொல்லி திட்டப்பகுதியில் ரூ.17.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 204 தனி வீடுகள்; என மொத்தம் ரூ.270.15 கோடி மதிப்பீட்டிலான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய குடியிருப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இன்றைய தினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள 9 திட்டப்பகுதிகளில் 400 சதுர அடி பரப்பளவுக்கு குறையாமல் ஒவ்வொரு குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இக்குடியிருப்புகள் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.  அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீரேற்று வசதி, மின் தூக்கிகள், சிறுவர் பூங்கா,

மின்னாக்கிகள்  மற்றும் தீயணைப்பு வசதிகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 761  பகுதிகளில் வசிக்கும் 23,826 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.500 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 718 கிரையப் பத்திரங்களும், மனைகளுக்கான 220 கிரையப் பத்திரங்களும்,

என 938 பயனாளிகளுக்கு கிரையப் பத்திரங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் திரு.ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, இ.ஆ.ப., தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப., திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாண்புமிகு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சா. ஞானதிரவியம்,

சட்டமன்ற உறுப்பினர் திரு. மு. அப்துல் வாகப், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. விஷ்ணு, இ.ஆ.ப., திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு. பி.எம். சரவணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரியலூர் மாவட்டத்திலிருந்து மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், சட்டமன்ற உறுப்பினர் திரு.கு. சின்னப்பா, அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog