அமைச்சர் பதவி... திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!

அமைச்சர் பதவி... திமுகவினருக்கு உதயநிதி ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
இதனையடுத்து திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனை திமுக மாவட்ட நிர்வாகிகள் கட்சித் தலைமைக்கு இன்று அனுப்பியுள்ளனர்.
இந்த தீர்மானம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "என்மீதுள்ள அன்பின் காரணமாக, எனக்கு அமைச்சர் பொறுப்பு அளிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு இனி யாரும் தர்மசங்கடத்தை உருவாக்கிவிட வேண்டாமென உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஐஏஎஸ் தேர்வில் சாதனை... சுவாதிஸ்ரீக்கு முதல்வர் வாழ்த்து!
எந்த சூழலில் எந்த முடிவை எடுக்க வேண்டுமென கழகமும், தலைமையும் நன்கறியும் என்பதை கழக உடன்பிறப்புகள் நாம் அனைவரும் அறிவோம்.
கட்சியினருக்கு உதயநிதி ஸ்டாலின் அட்வைஸ்
பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் வழியில் வந்த நம் கழக தலைவர் (ஸ்டாலின்) வழங்கும் கட்டளையின் வழியில் நின்று கழகத்தை (திமுக) வளர்த்தெடுக்க நாளும் தொடர்ந்து உழைத்திடுவோம்" என்று தமது அபிமானிகளுக்கு உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களுக்கே தர்மசங்கடம்: தனக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டி தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று உதயநிதி கட்சியினருக்கு விடுத்திருந்த வேண்டுகோளை தமிழக பாஜக கிண்டல் செய்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறும்போது, "அமைச்சர் பதவியை உங்களுக்கு வழங்கினால் மக்களுக்கே தர்ம சங்கடம் என்பதை தெளிவாக சொல்லவும்" என்று கிண்டல் செய்துள்ளார்.
Comments
Post a Comment