பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!


பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!


தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது விடப்படும் என்ற கேள்விக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிபதிலளித்துள்ளார்.

கொரோனா பரவல், அதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட பொது முடக்கம் காரணமாக இரண்டு ஆண்டு காலமாக மாணவர்களின் கல்வியில் பெரியளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டு முழுவதுமாக காணொளி காட்சியிலேயே சென்ற நிலையில் இந்த ஆண்டு பரவல் கொஞ்சம் மட்டுப்பட்டதால் சில மாதங்களுக்கு முன்னர் நேரடி வகுப்புகள் தொடங்கின.

ஆனாலும் மாணவர்கள் மனதளவில் இயல்பு நிலைக்கு திரும்ப மிகவும் கஷ்டப்பட்டனர். அதற்குள் கனமழை, வெள்ளம் ஏற்பட மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன. அது முடிந்த பின்னர் கொரோனா மூன்றாவது அலை உருவாகி மீண்டும் பள்ளிக்கூட கதவுகள் அடைக்கப்பட்டன.

இதனால் இந்த ஆண்டும் பொதுத் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் இம்முறை கட்டாயம் தேர்வை நடத்திவிட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உறுதியாக இருந்தது. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி தேர்வுகள் நடைபெறும் என்று கூறப்பட்டது.

அந்த வகையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் 17ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதியும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க மீதமுள்ள வகுப்புகளுக்கு எப்போது தேர்வு நடைபெறும், கோடை விடுமுறை எப்போது விடப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தீவிர முருக பக்தரான பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவ்வப்போது திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். தனது மனைவியுடன் சென்று வழிபாடு செய்த அமைச்சர் அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “கொரோனா சூழலால் ஒவ்வொன்றும் தள்ளிப் போய்கொண்டே வருகிறது. மே 5 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. பிற வகுப்பு மாணவர்களுக்கு பாடத் திட்டத்தை முடிக்க வேண்டும். இந்த சூழ்நிலையிலும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு விடுமுறையும் வழங்கப்பட்டது. எனவே மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவை பின்னர் அறிவிப்போம்” என்று கூறியுள்ளார்.

Comments

Popular posts from this blog

A Perfect Day Trip To Bergen Op Zoom Netherlands #Netherlands

10 Children s Books to Inspire Creativity in Kids

20 Best Dad Jokes a From Corny to Punny to Actually Pretty Hilarious #Jokes